districts

img

பிளஸ் 2 தேர்வில் நரிக்குறவ சமூக மாணவர் தேர்ச்சி

மயிலாடுதுறை, மே 9- பல்லவராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவ சமூக மாணவர் வீர சிவாஜி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், ‘வழக்குரைஞர் ஆவதே தனது வாழ்வின் லட்சியம்’ என தெரிவித்துள்ளார்.  மயிலாடுதுறை அருகே பல்லவ ராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குற வர் குடியிருப்பில் 100-க்கு மேற்பட்ட நரிக் குறவ சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர்.  இச்சமுதாய மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்பு பகுதியிலேயே ‘நீடு’  அறக்கட்டளை சார்பில் சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப் பட்டு 8-ஆம் வகுப்புவரை இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  அதன் பின்னர் கல்வியை தொடர மாணவர் களுக்கு நீடு அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடி யிருப்பில் தங்கியுள்ள வர்களில் இதுவரை 23  மாணவிகள் பட்டப் படிப்பை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நடந்து முடிந்த பிளஸ்  2 தேர்வில், இந்த குடியிருப்பைச் சேர்ந்த வீர சிவாஜி என்ற ஒரு மாணவர் மட்டும் தேர்வெ ழுதியிருந்த நிலையில், அவர் 303 மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்  தருமபுரம் ஆதீன மேல்நிலைப் பள்ளியில்  பயின்று பிளஸ் 2 தேர்வெழுதியிருந்தார். அந்த மாணவருக்கு பல்லவராயன்பேட்டை யில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரி வித்தனர். ‘சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரை ஞர் ஆவதே தனது லட்சியம்’ என மாணவர்  வீரசிவாஜி தெரிவித்துள்ளார்.