நாகப்பட்டினம், பிப்.22- நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி பங்குபெற்று 167 பயனாளிகளுக்கு சுமார் ரூ.67 லட்சத்து 91 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்ராஜ். மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷகிலா, ஒன்றியக் குழு தலைவர் ஆர்.சி.தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.