நாகப்பட்டினம் பிப்.14 - ஆதமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் தங்க நகை கடன் தள்ளுபடியில் விவசாயி களுக்கான நகைகளை கீழ்வேளூர் எம்எல்ஏ வீ.பி.நாகைமாலி வழங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயத்திற்காக தங்க நகை கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்ப டும் என அறிவிக்கப்பட்டது. அதனை நிறை வேற்றும் வகையில், கூட்டுறவு கடன் சங்கத் தில் 40 கிராமிற்கு உட்பட்டு நகைக் கடன் வாங்கியவர்களுக்கு தள்ளுபடி செய்யப்ப டும் என தமிழக அரசு அறிவித்தது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி களின் மூலம் விவசாயிகளிடமிருந்து கணக் கெடுக்கப்பட்டு இவ்வேலை நடைபெற்று வரு கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியில் தங்க நகை கடன் தள்ளுபடி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் பயனாளிகளுக்கு தங்க நகைகளை வழங்கினார். கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், செய லாளர் சரவணன், இயக்குனர் எம்.என்.அம்பிகா பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.