districts

img

கல்வி தன்முனைப்பு திட்டம்: நாகைமாலி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாகப்பட்டினம், நவ.7 -  நாகப்பட்டினம் மாவட் டம் ஆந்தகுடி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கல்வி தன்முனைப்பு திட்ட  தொடக்க விழாவை நாகை மாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.  கீழ்வேளூரை அடுத்த ஆந்தகுடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் மாவட்ட அளவி லான கல்வி தன் முனைப்பு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 25 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அப்பள்ளி களில் மாணவர்களின் சுய முன்னேற்றம், கற்றல்திறன், ஒழுக்கம், சமூக சேவை, பள்ளி வருகை உள்ளிட்ட திறன்களை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.  மேலும் மாணவர்களை தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுவிப்பது, இடை நிலை கற்றல் நிறுத்தத்தை தவிர்ப்பது உள்ளிட்ட பள்ளி சார்ந்த செயல்பாடுகளில், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்ற அமைப்புகள் செயல் படுதலை இத்திட்டம் ஊக்கு விக்கிறது. இத்திட்டத்தின் தொடக்க  விழா ஆந்தகுடி அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துரைமுருகு தலை மையில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் எம்.கே.சி. சுபா ஷினி திட்டத்தின் பயன்கள் குறித்து உரையாற்றினார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி மாணவர் குழுக்களின் தலை வர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து வாழ்த்திப் பேசினார்.