தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்டதை கண்டித்து, நாகை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில், பத்திரிகையாளர் சங்கத்தின் நாகை மாவட்டம் சார்பில் செயலாளர் சகாதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், மீனவர் சங்கப் பிரதிநிதி ராஜேந்திர நாட்டார், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.