districts

img

வலங்கைமானில் நாகை தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப்.5 - இந்தியா கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் திருவா ரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம், வலங்கை மான் பேரூராட்சி முழு வதும், கூட்டணி கட்சி தலை வர்களுடன் வாக்குச் சேகரித் தார். வலங்கைமான் ஒன்றி யம், பேரூராட்சிப் பகுதி களில் நாகை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் தலைமையில், வேட்பாளர் வை.செல்வராஜ் கதிர் அரி வாள் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.  வலங்கைமான் ஒன்றி யம் ரெகுநாதபுரத்தில் துவங்கிய பிரச்சாரப் பய ணம், உத்தமதானபுரம், அவளிநல்லூர், நல்லூர், இனாம்கிளியூர், முனி யூர், கோவிந்தகுடி, சந்திர சேகரபுரம், ஆவூர், ஆதிச்ச மங்கலம், விருப்பாச்சிபுரம் மற்றும் ஆலங்குடி, வலங்கைமான் பேரூராட்சி வார்டு பகுதிகளில் கடைவீதி வர்த்தக வியாபாரிகள், வாக்காளர்களைச் சந்தித்து,  கதிர் அரிவாள் சின்னத் திற்கு வேட்பாளர் வை. செல்வராஜ் வாக்குக் கேட்டார்.  பிரச்சாரப் பயணத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் வி.எஸ்.கலிய பெருமாள், வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா, மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.