districts

img

விவசாயிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்

தஞ்சாவூர், டிச.19 -  விவசாயிகள் ஒவ்வொரு வரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும் என நபார்டு வங்கி யின் தலைமை பொது மேலாளர் ஆர்.சங்கர் நாராயணன் தெரி வித்தார். தஞ்சாவூர் அருகே விளாரில்  செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர்  தென்னை உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில், வெல்லம் தயா ரிக்கும் தொழிற்கூடம், தேங்காயி லிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம்  ஆகிய துவக்க விழா நடை பெற்றது. குழுவின் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட  வேளாண்மை வணிகத்துறையின் துணை இயக்குநர் ஜி.வித்யா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் தேங்காயி லிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்தி ரங்களையும், தேங்காயிலிருந்து வெல்லம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் பார்வையிட்ட நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆர்.சங்கர் நாரா யணன் பேசியதாவது: விவசாயிகள் உற்பத்தியா ளர்கள் கூட்டமைப்புகளை உரு வாக்க நபார்டு வங்கிகள் மூலம் பல்வேறு முயற்சிகளை செய்து‌ வருகிறோம். ஒன்றிய அரசு சார்பில்  10 ஆயிரம் உழவர் உற்பத்தியா ளர்கள் அமைப்பை உருவாக்க அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத் தில் மட்டுமே 250 அமைப்புகள் உள்ளன.  தஞ்சாவூர் பகுதிகளில் நெல் மற்றும் தென்னை, கரும்பு அதிகளவில் உற்பத்தியாவதால், உழவர் உற்பத்தி குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

விவசாயிகள் தங்களின் பொருட் களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களாக விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும். குறைந்தது ஆயிரம் விவசாயிகளாவது உற்பத்தியாளர் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும். நல்ல வலுவான உற்பத்தியா ளர் கூட்டமைப்பை உருவாக்கும் வகையில் நபார்டு மூலம் பல்வேறு  வகையான பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன. இந்தியா  முழுவதும் நடைபெறும் கண்காட் சிகளில் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டால் பொருட் களை விற்பனை செய்வதற்கும் நல்ல விலை கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் வருங்காலத் தில் விவசாயப் புரட்சிகளை ஏற்ப டுத்தி விவசாயப் பொருட்களுக்கு நல்ல விலைகள் கிடைக்க உற்பத் தியாளர்கள் கூட்டமைப்பு நல்ல  முறையாக அமையும். நபார்டு வங்கி மூலம் கிராமப்புற மேம் பாட்டு திட்டங்களை பலப்படுத் தும் பணிகளை நடக்கின்றன. இந்தாண்டு ரூ.130 கோடி அளவுக்கு நீர் நிலைகள், அணைகள் போன்ற கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடி கிராமப்புற மேம்பாட்டுக்காக நபார்டு வங்கிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில்  ரூ.2,900 கோடியில் காவிரி மேம் பாட்டு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இந்தியாவில் விவசாயப் புரட்சியை உருவாக்கப் போவது உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் தான். விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக மக்க ளிடம் கொண்டு செல்வதை காட்டி லும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட் களாக கொண்டு செல்லும்போது அதிக லாபத்தை பெற முடியும். தனியார் நிறுவனம் மற்றும்  அரசுடன் இணைந்து விவசாயி கள் ஒரு பொருளை உருவாக்கி னால் நல்ல பலன் கிடைக்கும்.  ஒன்றிய அரசும், நபார்டும் ஒவ் வொரு நாளும் விவசாயிகளின் கையில் கூடுதலாக ஒரு 10 ரூபாயை  எப்படி கிடைக்கச் செய்வது என்பது குறித்து சிந்தித்து வரு கிறோம். விவசாயிகளுக்கும், பொருட் களை வாங்கும் நுகர்வோர்களுக் கும் உரிய விலையே கிடைப்ப தில்லை என புலம்பி வருகிறோம்.  இதில் இடைத்தரகர்கள் பிரச்ச னையை போக்குவதற்காகவும், விவசாயிகளுக்கும், நுகர்வோருக் கும் நல்ல தரமான பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் தான் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒவ்வொரு வரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற தொழில்நுட்பத்தை கை யாள வேண்டும். நுகர்வோர்கள் எந்த மாதிரியான பொருட்களை விரும்புகிறார்கள் என்பதற்கு ஏற்ப உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். குறைந்தது 40 சத வீத டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய் தால் கடை வாடகை, தேவையற்ற  செலவு குறையும். இதனால் விவ சாயிகளுக்கு லாபமும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.