தஞ்சாவூர், ஜூன் 15-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட இடையாத்தி ஊராட்சி, இடையாத்தி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப் பட்ட, இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டடத்தை, எம்எல்ஏ நா.அசோக் குமார் திறந்து வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவ மணி, செல்வேந்திரன், வட்டாரக் கல்வி அலு வலர் அங்கயற்கண்ணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் அன்புக்கரசி செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக் குழு துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பி னர் ரேவதி கண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்ச்செல்வி நடராஜன், வட் டார காங்கிரஸ் தலைவர் வெங்கடாசலம், தலைமையாசிரியர் (பொ) கண்ணதாசன், ஒப்பந்ததாரர் நெய்வேலி தெற்கு ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
தொடர்ந்து, பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டி டத்தை எம்எல்ஏ நா.அசோக்குமார் திறந்து வைத்தார்.
முன்னதாக பட்டுக்கோட்டை அருகே சீதாம்பாள்புரம் வாரியின் குறுக்கே, நெடுஞ் சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலை கள் திட்டத்தின் கீழ், ரூபாய் 3.71 கோடி யில் புதிய பாலம் கட்டும் பணியை எம்.எல்.ஏ நா.அசோக்குமார் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.