புதுச்சேரி,மார்ச் 5- புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர், கண்ணதாசன் வீதியில் வசிக்கும் நாராயண னின் மகள் ஆர்த்தி (வயது 9) கடந்த மார்ச் 2 ஆம் தேதியி லிருந்து காணவில்லை. இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாயமான சிறுமியை தேடி வந்தனர்.மேலும் சிறுமியை கண்டு பிடித்து தருமாறு அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறுமியை கண்டுபிடிக்க காவல்துறையை சேர்ந்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்தனர். சடலம் கண்டுபிடிப்பு இந்நிலையில் முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் வாய்க்காலில் சாக்கு மூட்டையில் கிடந்த சிறுமியின் உடல் சடலமாக செவ்வாயன்று (மார்ச் 5) மீட்கப்பட்டது. இத்தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு கொலையாளி களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று முழுக்க மிட்டனர்.பின்னர் சட்ட மன்ற உறுப்பினர்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் உற வினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தாசில்தார் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள மார்க்சிஸ்ட் வலியுறுத்தியது. சிபிஎம் கோரிக்கை சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும், உடற் கூறு ஆய்வினை ஜிப்மர் மருத்துவமனையில் தாசில்தார் முன்னி லையில் நடத்த கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் சர வணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சார்பில் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது.