கும்பகோணம், பிப்.1- திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கக்கூடிய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபு வனம் பிரசித்தி பெற்ற கம்பகரேஸ்வரர் கோயில் மகா குடமுழுக்கு பெருவிழா பிப்ரவரி 2 அன்று நடைபெறுகிறது. இந்த பெருவிழாவை முன்னிட்டு திருபுவனம் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில் பள்ளிவாசல் தலைவர் தாஜ்தீன் தலைமையில் நிர்வாகிகள் ராசுதீன், அலாவுதீன் ஹிபாயத்துல்லா, நசீர் அகமது, அப்துல் மஜீத், முஹம்மது அன்சாரி, சேக்அலாவுதீன் ஆகியோர் தருமபுரம் ஆதீனம் தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமி களை நேரில் சந்தித்து மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் தாம்பூல தட்டுடன் சீர்வரிசை யாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது மாசிலாமணி தேசிகர் ஞான சம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் வரவேற்று இஸ்லாமியர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசுகளை வழங்கினார். இது குறித்து ஜமாத்தார்கள் கூறுகையில், மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். பண்டிகையின் போது மட்டுமல்லாமல் ஒன்றாக இணைந்துதான் அனைத்து மதத்தவரும் வாழ்ந்து வருகிறோம், நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடு வது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரு கிறோம் என்று தெரிவித்தார்.