திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் 36 ஆண்டு கள் பணிபுரிந்து கடந்த ஜூன் 30 அன்று பணி ஓய்வு பெற்ற முருகேசனின் பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிறன்று திருச்சியில் நடந்தது. விழா விற்கு சிஐடியு மாநகர் மாவட் டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சம் மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செய லாளர் ஆர்.ராஜா ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். முன்னதாக தோழர் முருகே சன் கட்சி நிதியாக ரூ.5 ஆயி ரத்தை மாநிலக் குழு உறுப் பினர் ஸ்ரீதரிடம் வழங்கினார்.