districts

img

நகராட்சிப் பணியிடங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது சிஐடியு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 12-

     நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்த ரப் பணியிடங்களை ஒழித்து தனியா ருக்கு தாரைவார்க்கும் அரசாணை களை உடனடியாக திரும்பப் பெற வலி யுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  

   நகராட்சி, பேரூராட்சி நிரந்த ரப் பணியிடங்களை ஒழித்து தனியா ருக்கு தாரைவார்க்கும் அரசாணை களை உடனடியாக திரும்பப் பெற  வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க  வேண்டும். தினக்கூலி, சுய உதவிக்குழு,  ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயர்  களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைசெய்யும் தூய்மைப் பணியா ளர், ஓட்டுநர்கள், குடிநீர் பணியாளர் களை நிரந்தரப் படுத்த வேண்டும்.  

     இஎஸ்ஐ, பிஎப், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், 8 மணிநேர வேலை, வார  விடுப்பு, பண்டிகைகால விடுப்பு உள்  ளிட்ட அடிப்படைச் சட்டங்களை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு சார்பில் புதன்கிழமை மாநிலம் முழு வதும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலை மை வகித்தார். மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டப் பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன் உட்பட 300-க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற னர். இதில் 86 பெண்கள் உட்பட 122 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சிராப்பள்ளி

     சிஐடியு திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக் குழு சார்பில் திருச்சி மாநக ராட்சி அலுவலகம் முன்பு மறியல்  போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி உள்ளாட்  சித் துறை ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் எம்.பன்னீர்செல்வம், சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் டி.சீனி வாசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.செல்வி, நகர் மாவட்ட செயலாளர் சிவ ராஜ், மாவட்ட தலைவர் சம்பத், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் பி. பூமாலை, பெல் சிஐடியு சங்க பொதுச்  செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் பேசினர்.

    பின்னர் ஒத்தக்கடை பகுதியில் இருந்து ஊர்வலமாக மாநகராட்சி அலு வலகத்திற்கு வந்து அலுவலகம் முன்பு  அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில்  65 பெண்கள் உட்பட 150 பேரை போலீ சார் கைது செய்தனர்.

திருவாரூர்

      திருவாரூர் விளமல் பகுதியிலி ருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்  போராட்டம் நடைபெற்றது. போராட்டத்  திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். இதில் சிஐடியுவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

   மன்னார்குடி

     மன்னார்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.ஹனிபா தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை என்எம்ஆர் ஊழி யர்கள் சங்கம் (சிஐடியு) தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கூத்தாநல்லூரில் நடை பெற்ற போராட்டத்தில் சிஐடியு ஜி.ரகு பதி உள்ளிட்ட பலர் பேசினர். மன்னார் குடி தேரடியிலிருந்து பேரணியாக புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து நகராட்சி முன்பு மறி யல் போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை

      மயிலாடுதுறை நகராட்சி அலுவல கம் முன்பு உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.சேகர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம்.மனோ கரன், மாவட்டக் குழு உறுப்பினர் சி. மோகன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் ப.மாரியப்பன், மாவட்டத் தலை வர் ரெ.ரவீந்திரன் ஆகியோர் விளக்கி பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் நன்றி கூறினார்.