திருத்துறைப்பூண்டி நகராட்சி 11 ஆவது வார்டு மீனாட்சி வாய்க்கால் கீழத்தெருவில் அமைந்துள்ள சாலை முழுவதும் சேதமடைந்து சாக்கடை நீர் வழிந்தோடும் பாதையாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், நகர்மன்ற உறுப்பினர் ராமலோக ஈஸ்வரி ரகுராமன் தலைமையில் சாலையை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சாலையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.