திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் தேசியக் கொடியை ஏற்றினார். நகராட்சியின் கணினி சிட்டா அமைப்பாளர் சிற்றரசு முன்னிலை வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில், சிறந்த நகராட்சியாக திருத்துறைப்பூண்டி நகராட்சி 2 ஆம் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ் நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியனுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில், நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.