பெரம்பலூர், ஜூன் 19-
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் க.கற்பகம் தலைமை யில் திங்களன்று நடைபெற்றது.
அப்போது பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர் கள் சங்கத்தினர் (சிஐடியு) சார்பில் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், ‘‘பெரம்பலூர் நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஊழியர்களின் ஊதி யத்தில் இபிஎப் தொகை பிடித்தம் செய்யப் பட்டாலும் இபிஎப் கணக்கில் வரவு வைக் கப்படுவதில்லை. நகராட்சி ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. பல மாதங்கள் ஆகியும் பிடித்தம் செய்த தொகை வழங்கப்படவில்லை. அதே போல தினக்கூலி ரூ.580 முழுமையாக வழங்கவில்லை’’ என தெரிவித்துள்ளனர்.
சாலையோர வியாபாரிகள்
சாலையோர வியாபாரிகள் அளித்த மனுவில், ‘‘பழையபேருந்து நிலையம் காந்தி சிலைக்கு தென்புறம் பழவண்டி கள் நிறுத்தும் பகுதியில் சிமெண்ட் கல் பதித்து தருவதோடு சாலையோர வியா பாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி வெண்டர் கமிட்டியை கூட்டி சாலையோர வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்’’ என தெரிவித்துள்ள னர்.
கட்டுமானத் தொழிலாளர்
இதே போல கட்டுமானத் தொழிலாளர் சங்கம் அளித்துள்ள மனுவில், ‘‘தமிழ்நாடு அரசின் முத்தரப்பு கட்டுமான நலவாரிய 35, 36, 37-ஆவது வாரிய கூட்டங்களில் முடிவு செய்து அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிட்டு உதவ வேண்டும்’’ என தொவித்துள்ளனர்.
நிகழ்வில், சிஐடியு மாவட்டத் தலை வர் அ.ரெங்கநாதன் கட்டுமானத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.அழகர், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் பி.ரெங்கராஜ் ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.