districts

img

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மே 23 -  

    தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் ஊழியர் விரோதப் போக்கைக்  கண்டித்தும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத் தியும் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆர்.சரஸ்வதி கடந்த 15-ஆம் தேதி  புதுக்கோட்டை நகராட்சியில் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வுக்குப்பின் புதுக்கோட்டை  நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கரு.மணி வண்ணன், சுகாதார அலுவலர் பொறுப்பு நா. கணேசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

   எந்தவிதமான புகாரும்  இல்லாத நிலையில் மேற்படி இருவரையும்  காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, யாரு டையோ தூண்டுதலின் பேரில் பணிநீக்கம் செய்துள்ளதாகவும், தற்காலிக பணி நீக்கத்தை உடனடியாக ரத்துசெய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நகராட்சி,  மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் கரு.மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செய லாளர் மு.தாமோதரன், பொருளாளர் இரா. சுவாமிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் சே.ஜபருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் க.முக மதலிஜின்னா, தோழமைச் சங்க நிர்வாகிகள்  கே.குமரேசன், ஆ.மலர்விழி, எஸ்.குணசேக ரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர்.