districts

img

எம்ஆர்பி செவிலியர்கள் கைது: கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், அக்.12 - சென்னையில் அறவழியில் போராட்டம் நடத்திய எம்ஆர்பி செவி லியர்களை காவல்துறை அராஜக மான முறையில் கைது செய்துள் ளதை கண்டித்தும், எம்ஆர்பி செவி லியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.கண்ணன், பேரூராட்சி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் முருகேசன், மருந்தாளுநர் சங்க மாநிலச் செய லாளர் கே.இளங்கோ, மாவட்டச் செயலாளர் பிரேம்குமார், ஆய்வக  நுட்பநர் சங்க மாவட்டச் செயலா ளர் சுப்பிரமணி, எம்ஆர்பி செவிலி யர் சங்க அன்பரசு ஆகியோர் பேசி னர்.