மன்னார்குடி, ஜூன் 7-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் அசோசியேஷன் சார்பில் இரண்டாம் ஆண்டு மிஸ்டர் டெல்டா 2023 -க்கான ஆணழ கன் போட்டிகள் அசோகா சிசுவிகார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றன.
நிகழ்விற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் மரு. அசோக் குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் கல்வியாளர் எம்.ஜி.வெங்கட்ராஜன், சர்வதேச நடுவர் டி.கே.குருநாதன், உலக வலுதூக்கும் வீரர் எஸ்.விமல் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
செயல் தலைவர் முனைவர் என்.எஸ்.அசோக் குமார் வரவேற்றார். ஆர்.டி.என்.மீனாட்சி சூரிய பிரகாஷ், தரணி குழுமத்தின் தலைவர் எஸ்.காமராஜ் போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டிகளின் முடிவில், மிஸ்டர் டெல்டா 2023- ஆக தினேஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். பங்கேற்பா ளர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் எஸ்.எம். டி.டி.கருணாநிதி உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.
அசோகா பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.சர வணன் போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். ஜே. சர்குணன் நன்றி கூறினார்.