districts

img

மோட்டார் வாகன விபத்து வழக்கு 2-வது சிறப்பு நீதிமன்றம் திறப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 29 -

    மோட்டார் வழக்கு தொடர்பான தீர்ப்பா யத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. மேலும் 2-வது சிறப்பு  நீதிமன்றத்தை சனிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் துவக்கி  வைத்தார்.

     மோட்டார் வழக்கு தொடர்பான இழப்பீடு  உள்ளிட்ட தீர்ப்புகள் தாமதமாவதை தடுக்கும்  வகையில், விரைந்து தீர்ப்புகள் வழங்கப்பட ஏதுவாக இந்த 2வது நீதிமன்றம் செயல்பட  உள்ளது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழ கன் மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க நிர்வா கிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.