districts

தாய், மகன், மகள் தற்கொலை

மதுரை, ஆக.17-

     மதுரை தாசில்தார்நகர்-அன்பு நகர் ராஜராஜன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உமாதேவி (45) என்ற மகளும் கோதண்டபாணி (42) என்ற மகனும் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிள்ளைகளை விட்டு பாண்டியன் பிரிந்து சென்றுவிட்டார். வாசுகி தனது பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

     இந்த நிலையில் வியாழனன்று காலை இவர்களது வீட்டைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் அண்ணாநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், வாசுகி மற்றும் உமாதேவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்ததும் அவர்கள் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது தெரியவந்தது.  

    மூன்று பேரின் உடல்களும் உடற் கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.