districts

முதல்வரின் காலை உணவுத்திட்டப் பயிற்சி முகாம்

பாபநாசம், ஜுன் 28-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ் நாடு முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் மைய பொறுப்பாளர்களுக்கு சமை யல் பயிற்சி நடைபெற்றது.

     முகாமை பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் துவங்கி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், பயிற்றுநர்கள் சங்கரி, குணவதி, வின்சியா ஆகி யோர் முதல்வரின் காலை உணவுத் திட்டம், அதன் செயல்பாடு, உணவு வழங்கும் முறை குறித்து மையப் பொறுப்பாளர்களுக்கு பயிற்சியளித்தனர்.