நாகப்பட்டினம் மாவட்டம் நாகை தெற்கு ஒன்றியம் வடுகச்சேரி ஊராட்சியில் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். கிளைச் செயலாளர் ஏ.சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக்குழு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் என்.வடிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ஜி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.