districts

img

எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மொழியைப் பிடிக்கும் என்கிறார் மோடி

அறந்தாங்கி, ஏப்.10 - எந்த மாநிலத்திற்கு சென்றா லும், அந்த மொழியை பிடிக்கும்  எனக்கூறி பிரதமர் மோடி மக்களை  ஏமாற்றுகிறார் என்றார் திரைக் கலைஞர் வாகை சந்திரசேகர். இராமநாதபுரம் நாடாளு மன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இவரை ஆத ரித்து திரைப்பட கலைஞர் வாகை  சந்திரசேகர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.  புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி, ஆவுடையார்கோ வில், நாகுடி ஆகிய பகுதிகளில் வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஏணி சின்னத்தில் வாக்குச் சேகரித்து பேசிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.  அப்போது அவர் பேசுகையில்,  “மோடி ஆட்சிக்கு வந்ததும், கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு  இந்தியர்களின் வங்கிக் கணக்கிற் கும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி னார். ஆனால் 15 பைசாகூட போட வில்லை, மோடி தமிழகத்திற்கு வந்தால் தமிழ் பிடிக்கும் என் கிறார்; ஆந்திரா, கேரளாவுக்குச் சென் றால், அங்குள்ள மொழிகளை பிடிக்கும் என்கிறார்; இப்படி எங்கே  சென்றாலும் அந்தந்த மொழி களை பிடிக்கும் என்கிறார். ஆனால்  ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள் கையைப் பின்பற்றி வருகிறார்.  மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் மக்கள் வாக்க ளிக்க முடியாத சூழ்நிலை உருவா கும்.  ஒன்றிய அரசு மற்ற மாநிலங் களுக்கு வழங்குவது போல் தமிழகத்திற்கு எந்த நிவாரண நிதி யோ, இதர நிதியோ வழங்குவ தில்லை. மாறாக ஒன்றிய அரசின் நிதியை பெறாமலே, தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். எனவே  வாக்காளர்கள் ‘இந்தியா’ கூட்டணி  வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஏணி  சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார். பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணி  கட்சியினர் கலந்து கொண்டனர்.