districts

img

நவீனமாகும் தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை

சென்னை, மார்ச் 5- சென்னை தண்டையார்பேட்டை பணிமனையில் 27 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார் பேட்டை பேருந்து பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனையை நவீனப்படுத்தி தர வேண்டும் என ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபிநேசர் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார், முதல்வரிடம் மனு அளித்திருந்தார். இதையடுத்து இந்த பணிமனையை தரம் உயர்த்த வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 1.7 ஏக்கர் பரப்பளவில் இந்த பணிமனை 12 மாதங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்தஅடிக்கல்நாட்டு விழாவில்  மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் பா.விமலா, குமாரி தேவி, ரேணுகா, திமுக பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.