தூத்துக்குடி, ஆக. 14
இந்தியாவில் ஜி 20 மாநாடு நடைபெறுவதை முன் னிட்டு தூத்துக்குடி தனியார் பள்ளியில் மாணவர்கள் கலந்து கொண்ட மாதிரி ஜி 20 மாநாடு நடைபெற்றது. உலகின் பல்வேறு விஷயங்கள் குறித்து இளம் மாண வர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த ஆண்டுக்கான வளர்ந்த நாடுகளின் ஜி 20 மாநாடு இந்தியா தலைமையில் இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது .இதையொட்டி பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.
இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் ஜி-20 மாநாடு நடைபெறுவதையொட்டி தூத்துக்குடியில் தனியார் பள்ளி சார்பில் பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாதிரி ஜி 20 மாநாடு நடத்தப்பட்டது. இதில் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உலகில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி குறித்து பேசுவது போன்று மாணவர்கள் பொருளாதாரம், கல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரபுசாரா எரிசக்தி ,சுற்றுலாத்துறை ,அறிவியல் ஆகியவை குறித்து தங்களது கட்டுரை களை எடுத்து வைத்தனர். இந்த மாதிரி மாநாட்டை பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.