தூத்துக்குடி,நவ. 14 தூத்துக்குடி மாவட் டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் பால முருகன். இவர் எட்டய புரம் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுபாஷினி (20). இவர் திருநெல்வேலி பாளையங் கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை சமூக பணி பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவா மாநிலத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் நடந்த தேசிய தடகள விளையாட்டு போட்டியில், 1500 மீட்டர் ஓட்டப்போட்டி யில் பங்கேற்று முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் அடுத்த மாத நேபாளம் நாட்டில் உள்ள காட்மாண்டுவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சுபாஷினி. தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள சுபாஷினியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பி னர் மார்க்கண்டேயன் பாராட்டி ஊக்க தொகை வழங்கி யுள்ளார். பலரும் சுபாஷினியை பாராட்டி வருகின்றனர்.