districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 4-  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை சீர்குலைப் பதை தடுக்க வேண்டும். ஒன்று பட்ட இந்தியா அமைதி பூங்கா வாக தொடர்ந்திட வேண்டும் என  வலியுறுத்தி, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகரம் சார்பில் கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் எஸ். கோஸ்கனி வரவேற்றார். இதில், மாநிலச் செய லாளர் பி.செந்தில்குமார், மாவட்டச் செய லாளர் என்.குருசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். ஜெ யினுலாபுதீன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாநிலச் செயலாளர் ஆர்.கலைச் செல்வி, மக்கா பள்ளி செயலாளர் ஏ.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் பேசினர். சிபிஎம் மாநகரச்  செயலாளர் என்.வடிவேலன் நன்றி கூறினார்.