அறந்தாங்கி, ஏப்.13- இந்தியா கூட்டணி சார்பாக சிவ கங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத் தில், கடையாத்துப்பட்டி, ராஜேந்திர புரம், அரசர்குளம், ஆயிங்குடி, மேற்ப னைக்காடு, சிலட்டூர், எரிச்சி உள்பட 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகி யோர் கைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது, “தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை வீழ்த்தி இந்தியா கூட்டணி அரசு அமைய வேண்டும். தமிழக அரசு சார்பாக விடுபட்டவர் களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். கிராமப் புறங்களில் வசிக்கும் ஏழைகளின் குடிசை வீடுகளுக்கு பதிலாக, கலைஞர் பெயரில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படும்” என்றனர். வாக்குச் சேகரிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாதவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புஷ்பராஜ், ஒன்றி யக் குழு தலைவர் மகேஸ்வரி சண்முக நாதன் உட்பட இந்தியா கூட்டணி கட்சி யினர் பங்கேற்றனர்.