districts

திருச்சி தொழிலாளர் அரசு ஈட்டுறுதி  மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

 திருச்சிராப்பள்ளி, மார்ச் 6- திருச்சி தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவ மனையில் உட்கட்டமைப்பு வசதிகள், அறுவைச் சிகிச்சை  மையம், மகப்பேறு சிகிச்சை மையம், குழந்தைகள் நல  மருத்துவ மையபிரிவு, ஆய்வகங்கள், சித்தா பிரிவு,  ஆயர்வேத சிகிச்சை பிரிவு, சமையல் கூடம் உள்ளிட்ட  இடங்களை தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் திங்களன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.  மேலும் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உண வினை உட்கொண்டு அதன் தரத்தினை பரிசோதித்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார்.  ஆய்வின்போது, தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருந்த கங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர்  ராஜமூர்த்தி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் பாரதி,  மருத்துவமனை கண்காணிப்பாளர் இனிகோராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.