மயிலாடுதுறை, பிப்.5- மயிலாடுதுறை வட்டம் வில்லியநல்லூர் கிழாய், குத்தாலம் வட்டம் சென்னிய நல்லூர், பழைய கூடலூர், தரங்கம்பாடி வட்டம் நல் லாடை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர் கள், உளுந்து பயிர்கள், மூழ்கியதை அமைச்சர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘மயி லாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற் றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர் பாராத விதமாக பெய்த கன மழையினால் 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நெற் நெற்கதிர்கள் சேதம் அடைந் துள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிர் சேதாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தமிழ்நாடு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வரு வாய்த் துறையினர், வேளா ண்மை துறையினர், பாதிக் கப்பட்ட நெற்பயிர்சேதங் களை கணக்கெடுக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நெற் பயிர்கள் சேதம் அடைந்துள் ளதாக தகவல் வந்துள்ளது. அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு தொகை கட்ட அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 97 சதவீதம் பேர் பயிர் காப்பீட்டு தொகை கட்டி உள்ளனர். விவசாய சங்க பிரதிநிதி கள், விவசாயிகளின் கருத் துக்கள், முதல்வரிடம் அறிக் கையாக சமர்ப்பிக்கப்படும். விவசாயிகள் குறுவை தொகுப்பு வாங்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. எல்லா கொள்முதல் நிலையங்களும் செயல்பாட் டில் உள்ளன. இந்த ஆண்டு அதிகமான நேரடி கொள் முதல் நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளன’’ என தெரி வித்தார். ஆய்வின் போது, வேளா ண்மை உற்பத்தி ஆணை யர்-அரசு செயலாளர் சி.சமய மூர்த்தி, வேளாண்மை இயக் குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, சட்டமன்ற உறுப்பி னர்கள் நிவேதா எம்.முரு கன் (பூம்புகார்), எஸ்.ராஜ் குமார் (மயிலாடுதுறை), விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட னிருந்தனர்.