districts

img

நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு நாகை மாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், பிப்.6- நாகப்பட்டினம் மாவட்  டத்தில் பருவம் தவறிய கன மழையினால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்  துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆய்வு மேற்கொண்டார். இதில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்  பினர் வி.பி.நாகைமாலி  பாதிப்பு பற்றிய விவரங் களை எடுத்துரைத்தார். நாகப்பட்டினம் மாவட் டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி, கீழ்  வேளுர் ஒன்றியம், சாட்டி யக்குடி ஊராட்சி மற்றும்  தலைஞாயிறு ஒன்றியம், காடந்தேத்தி ஊராட்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.  இதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையினால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் 27,817 ஹெக்டர் நீரில்  சாய்ந்துள்ளது. இதில் நாகப் பட்டினம் வட்டாரத்தில் 3,287 ஹெக்டரும், திருமரு கல் வட்டாரத்தில் 5.326 ஹெக்டரும், கீழ்வேளூர் வட்டாரத்தில் 6,729 ஹெக்ட ரும், கீழையூர் வட்டாரத்தில் 2,575 ஹெக்டரும். வேதாரண்  யம் வட்டாரத்தில் 7,520 ஹெக்டரும், தலைஞாயிறு வட்டாரத்தில் 2,200 ஹெக்ட ரும் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துள்ளன.  ஆய்வின்போது, உழவர் நலத்துறை வேளாண் உற்  பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சீ.சமய மூர்த்தி, வேளாண்மை மற்  றும் உழவர் நலத்துரை  இயக்குநர் ஆ.அண்ணா துரை, மாவட்ட ஆட்சியர் மரு.அருண்தம்புராஜ், கீழ்  வேளுர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகை மாலி ஆகி யோர் உடனிருந்தனர்.