ராணிப்பேட்டை, ஆக.23-
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்களன்று (ஆக. 21) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், உள் நோயாளிகள், புறநோயாளிகள், காச நோய்கள் பிரிவு, மருந்தகம், பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள். பணியாளர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணியிலிருந்த மருத்துவரிடம் கேட்டதற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருகை தந்து சிகிச்சைகள் எடுத்து செல்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான இடமில்லை, மேலும் கட்டடங்கள் பழமையாக இருப்பதால் இடவசதியும் போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.
இதற்கான புதிய கட்டடங்கள் வேண்டி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தில் முதலமைச்சருக்கு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இத்திட்டத்தில் புதிய கட்டி டங்கள் கட்டுவதற்கு தேவையான திட்ட மதிப்பீட்டினை உடனடியாக தயார் செய்து வழங்க மருத்துவரை கேட்டுக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து மருத்துவமனையின் வளாகத்திலும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.