திருவாரூர், டிச.8 - கடந்த டிச.3 அன்று மதியம் 11 மணியள வில் செவிலியர் வனஜா பட்டுக்கோட்டை வட சேரி ரோட்டில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த 20-22 வயது மதிப்புடைய கருவாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வசந்த் சாலை விபத்தில் படு காயம் அடைந்து சுயநினைவில்லாமல் இருந்தார். உடனடியாக அவ்வழியாக வந்த செவிலி யர் வனஜா விபத்தில் காயமடைந்த கருவாக் குறிச்சி கிராமத்தினை சேர்ந்த வசந்த் என்ப வரை பரிசோதித்து, சிபிஆர் முதலுதவி எனும் உயிர்காக்கும் முதல் உதவி சிகிச்சை கொடுத் துள்ளார். இந்த முதலுதவி சிகிச்சையினால், அந்த இளைஞர் நல்ல முன்னேற்றத்துடன் தொடர்ந்து மூச்சுவிட தொடங்கியுள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் உடனே மன்னார் குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார். படுகாய மடைந்த அவர் தற்போது உடல்நலத்துடன் உள்ளார். செவிலியர் வனஜாவின் மருத்துவ சேவை யினை பாராட்டி, திருவாரூர் மாவட்ட ஆட்சிய ரக அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கௌரவித்தார். மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவா ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன் உடனிருந்தனர்.