districts

img

டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக கிராமம் கிராமமாக அரசின் நிலையை விளக்கிய அமைச்சர் மூர்த்தி

மதுரை, ஜன.9-  அரிட்டாப்பட்டி, வல்லா ளப்பட்டி, கிடாரிப்பட்டி, கோட்டைவாசல், நரசிங்கம் பட்டி, தெற்குத் தெரு உள் ளிட்ட கிராமங்களுக்கு நேர டியாக கிராமம் கிராமமாக சென்ற அமைச்சர் மூர்த்தி, கூடியிருந்த மக்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவின்படி டங்ஸ் டன் குறித்து தமிழ்நாடு அர சின் நிலை குறித்து விளக்கி கூறினார்.  மக்களிடையே அவர் பேசியதாவது: அனைத்து சமூக பொது மக்களையும் பெரியவர் களையும் நேரில் சந்தித்து  தமிழ்நாடு அரசின் நிலை  குறித்து முடிவு என்ன என்  பதை தெளிவுபடுத்தவும், சட்டமன்றம் நடந்தாலும் கூட  தம்மையும் அதிகாரிகளை யும் தற்போது முதல்வர் அனு ப்பி வைத்துள்ளார். கிராம  சபைக் கூட்டத்தில் கலந்து  கொண்டேன். ஒன்றிய அரசை  ஒருபோதும் அனுமதிக்க விடக் கூடாது என்பதில் அனைத்து பொதுமக்களின் கருத்தை ஏற்று சட்டமன்றத்  தில் முதல்வர் தீர்மானம்  இயற்றினார். சட்டமன்றத் தில் பேசிய நிதி அமைச்சர், ஒரு கைப்பிடி மண்ணை கூட  எடுக்க விடமாட்டோம் தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டின்  ஏலத்தை தன்னிச்சையாக ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. நிச்சய மாக நடவடிக்கைகளை தொடங்கும் முன்பாக அனை வரும் எதிர்ப்பு தெரிவித்துள் ளோம். முதலமைச்சர்  ஒரு  துளி கூட மக்களுக்கு பாதிப்பு  வராமல் பார்த்துக் கொள் வார். இவ்வாறு அவர் பேசி னார். அமைச்சரின் பேச்சிற்கு கூட்டத்தில் இருந்த ஏராள மான பெண்கள் குலவை யிட்டும், கைத்தட்டியும் வர வேற்பு கொடுத்தனர். முன்னதாக செய்தியாள ரிடம் பேசி அமைச்சர் மூர்த்தி,  “டங்ஸ்டன் திட்டம் அரிட்டா பட்டி பகுதியில் வரவே வராது,  வரக்கூடாது என்பதை சட்ட மன்றத்தில் அனைத்து கட்சி களின் ஆதரவுடன் ஒருமன தாக சட்டம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனி னும் அச்சத்தை போக்கும்  வகையில் நேரடியாக மக் களை சந்திக்க தம்மையும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளார் என்று தெரி வித்தார். இந்த விளக்கக் கூட்டத்  தில் மாவட்ட ஆட்சியர் சங்  கீதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மதுரை மாவட்ட  உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) அரவிந்த், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சித்ரா, மேலூர் தாசில்தார் செந்தாமரை, மேலூர் வட்  டார வளர்ச்சி அலுவலர் கள் சுந்தரசாமி, ரத்ன கலா, முன்னாள் மாவட்ட  கவுன்சிலர் நேரு பாண்டி யன், அ.வல்லாளபட்டி பேரூ ராட்சி சேர்மன் குமரன், கிராம  பிரமுகர்கள், பெரியோர்கள், பொதுமக்கள், இளைஞர் கள் என பலர் கலந்து கொண்  டனர்.