பாலக்காடு, அக். 2- கேரள உள்ளாட்சித் துறையின் குடும்பஸ்ரீ இயக்கத்தின் கீழ் செயல் படுத்தப்படும் மீண்டும் பள்ளிக்கு என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை அமைச் சர் எம்.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார். டாக்டர் திரிதாலா கே.பி.மேனன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் பிரச்சா ரத்தை துவக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வறுமையில் வாழும் மக்களைக் கொண்ட மாநிலமாக கேரளாவை மாற்றிய தில் மிக முக்கியப் பங்காற்றிய இயக்கம் குடும்பஸ்ரீ. இதன் உள்ளடக்கம் மற்றும் தன்மையில் பெரிய மாற்றங்கள் வரு கின்றன. தேவையான அறிவையும் ஆற்ற லையும் திரட்டுவதற்காகவே இவ்வாறான வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வாழ்க்கைத் தரம், சமூக-பொருளா தார குறிகாட்டிகள் மற்றும் மனித முன் னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஆயோக் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்க ளின் குறியீடுகளில் மாநிலத்தை முதலி டமாக்குவதில் குடும்ப ஸ்ரீ பெரும் பங்கு வகிக்கிறது. டிசம்பர் 10ஆம் தேதி வரை ஒவ்வொரு விடுமுறையிலும் தாய்மார்க ளும், பாட்டிகளும் பள்ளிக்கு செல்வார்கள். குடும்பஸ்ரீ பணியை சிறப்பாக செய்ய உதவும் பாடத்திட்டங்கள் உள்ளது என்று அமைச்சர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் 46 லட்சம் பெண்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வார் கள். குடும்பஸ்ரீ மூன்றடுக்கு அமைப்பு முறை யை மேலும் வலுப்படுத்தவும், புதிய யுகத் தின் சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப புதுமை யான திட்டங்களை அயல்கூட்டத்தினர் மேற்கொள்ளவும் இந்த பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 15 ஆயிரம் பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் ஆசிரி யர்களாக செயல்படுகிறார்கள். திரிதாலா ஊராட்சி தலைவர் பி.கே.ஜெயா தூய்மை உறுதிமொழியை ஏற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.பினு மோள் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சி யர் டாக்டர். எஸ் சித்ரா, உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் குடும்பஸ்ரீ மாநில பணி செயல் இயக்குநர் ஜாபர் மாலிக், குடும்பஸ்ரீ மாவட்ட பணி இணை ஒருங்கிணைப்பாளர் கே.கே.சந்திரதாஸ் ஆகியோர் பேசினர்.