districts

img

பெரம்பலூர், திருச்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி,  மார்ச் 30 - பெரம்பலூர் தொகுதியின் திமுக வேட்பாளர் அருண்நேரு மற்றும் திருச்சி தொகுதி மதி முக வேட்பாளர் துரை.வைகோ ஆகியோரை ஆதரித்து, அமைச் சர் கே.என்.நேரு பிரச்சாரம் செய் தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மண்ணச்சநல்லூரில்  பிரச்சாரத்தை தொடங்கினார்.  மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் பூனாம்பாளையத்தில் தொடங்கிய பிரச்சாரத்தில் தொ ழில் அதிபர் கே.என்.ராமஜெயம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின், பூனாம் பாளையம் மாரியம்மன் கோயில்  அருகே பிரச்சாரத்தை தொடங்கி னார். பிரச்சாரத்தில் திருச்சி வடக்கு  மாவட்டச் செயலாளரும், முசிறி  சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ-வுமான காடுவெட்டி தியாகராஜன்,  மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மத்திய மாவட்டச் செய லாளர் வைரமணி, திருச்சி வடக்கு  மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அய்யம்பாளை யம், தத்தமங்கலம், தழுதாளப் பட்டி, ஓமந்தூர், வீரானி, திரு வல்லரை, திருப்பஞ்சலி ஆகிய  பகுதிகளில் பிரச்சாரம் செய்த னர். பிரச்சாரத்தின் போது ஒவ் வொரு பகுதியிலும் வேட்பாளர் அருண்நேருவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த பிரச்சாரத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு பேசுகையில், “மண் ணச்சநல்லூர் பெரிய நகரமாக  உருவாகி வருகிறது. நகரமாக  உருவாகும் போது வேலை வாய்ப்பு பெருகும். மண்ணச்ச நல்லூர், சமயபுரத்தை மாநக ராட்சியில் இணைத்து புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு  செய்யப்படும். பேரூராட்சியின் பதவி காலம் முடியும்போது மாநக ராட்சியாக மாறும். மாநகராட்சி யாக ஆகும்போது பூனாம்பாளை யம் கிராமத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.  வேட்பாளர் அருண் நேருவை  பெருவாரியான வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து பணி யாற்றக் கூடிய ஒரு வேட்பாளர் இவர்.  உங்கள் பேராதரவை உதய  சூரியன் சின்னத்திற்கு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்”  என்றார்.

திருச்சி வேட்பாளர்  துரை.வைகோ பிரச்சாரம்

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.  திமுக முதன்மைச் செயலாள ரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு வுடன் மதிமுக வேட்பாளர் துரை. வைகோ, திருவரங்கம் ஆண்ட வர் ஆசிரம அடியார் ஸ்ரீமத் ஆண்ட வன் ஸ்ரீவராக மகாதேசிகனை சந்தித்து வாழ்த்து பெற்று ஆதரவு  கோரினார். திருச்சி மேற்கு மாநகரச் செயலாளர், மாநகர மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வழக் கறிஞர் வைரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், திருச்சி மாவட்ட  கைப்பந்து கழக செயலாளரு மான மேலூர் எஸ்.குணா, ஸ்ரீரங்கம் பூ வியாபாரிகள் சங்கத்  தலைவர் ராஜு ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஸ்ரீரங்கம் புதுமை வள்ளல் புனித  அந்தோணியார் திருத்தலத்திற்கு சென்று, அங்குள்ள அமல ஆசிர மம் பங்கு பணியகத்தில் உள்ள பங்குத்தந்தை சை.இராயப்பன், உதவித்தந்தை எம்.அருள் ஜெய்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அமைச்சர் நேரு,  வேட்பாளர் துரை.வைகோ வுக்கு ஆதரவாக முக்கிய பிர முகர்களை சந்தித்து ஆதரவு திரட் டினார். அப்போது மக்களுக்காக குரல் கொடுக்க திமுக தலை மையிலான இந்தியா கூட்டணிக்கு  ஆதரவு தாருங்கள் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வுகளில் திருச்சி மேற்கு மாநகரச் செயலாளர், மாநகர மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செய லாளர் வழக்கறிஞர் வைரமணி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், தொகுதி பொறுப் பாளருமான புதூர் மு.பூமிநாதன், துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல்.இராச மாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்  குமாரை சந்தித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள், வெள்ளாளர் முன்னேற் றக் கழக  தலைவர் ஹரிஹரன் பிள்ளை உள்ளிட்டோரை சந்தித் தும் வேட்பாளர் துரை.வைகோ ஆதரவு திரட்டினார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகி களை சந்தித்து ஆதரவு திரட்டிய துரை வைகோ மனிதநேய மக்கள்  கட்சியின் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண் டார். தொடர்ந்து அகில இந்திய  பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி களிடம் ஆதரவு திரட்டினார்.