districts

img

அதிமுகவும், பாஜகவும் 2 ஆம் இடத்திற்கே போட்டி போடுகின்றன

புதுக்கோட்டை, ஏப்.6 - மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிமுக வுக்கும், பாஜகவுக்கும் இடையே இரண்டாமிடத்தை பிடிப்பதற்கே கடுமையான போட்டி நிலவுகிறது என்றார் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி மக்களவைத் தொகுதி யில் இந்தியா கூட்டணியில் போட்டி யிடும் மதிமுக வேட்பாளர் துரை.வை கோவுக்கு புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தேர்தல் பணி மனையைத் திறந்து வைத்தும்,  அன்று மாலை கந்தர்வகோட்டையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத் தில் பங்கேற்றும் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஏழை-எளிய மக்களின் தேவைகள் என்ன என்பதை முழுமையாக அறிந்து, நிறைவேற்றித் தரும் இயக்கம் திமுக. பிரதமர் மோடிக் கும் எங்களுக்கும் என்ன பங்காளித் தகராறா? தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை அவர்கள் தர வில்லை. அதைத்தான் சுட்டிக் காட்டு கிறோம். திமுக ஆட்சி அமைந்த பிறகு, கொ ரோனா பரவல், கட்டுப்பாடு, அதன் பிறகு வெள்ளம் என தொடர்ந்து செலவு மட்டுமே செய்து கொண்டி ருக்கிறோம். மத்தியில் இருந்து நிதி  தரப்படுவதில்லை. நிதி கேட்டால் வாயே திறப்பதில்லை. ஆனால், தவ றான தகவல்களை ஒன்றிய நிதிய மைச்சர் சொல்லிக் கொண்டிருக் கிறார். நமக்கு தேவையான ஆட்சி  ஒன்றியத்தில் அமைந்தால், தமிழ் நாட்டுக்கு இன்னும் கூடுதலான திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.  பெரிய வளர்ச்சியை செய்து காட்ட முடியும். மாநகராட்சியாக தரம் உயர்த்தி யுள்ளதன் மூலம், திருச்சிக்கு நிக ரான வளர்ச்சி புதுக்கோட்டைக்கும் கிடைக்கும். புதை சாக்கடைத் திட்டம், தொழில் வளர்ச்சி, அதன் மூலம் வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற திட்டங்கள் தீட்டப்படும்.   கந்தர்வகோட்டை பேரூராட்சியாகும் புதுக்கோட்டை நகரின் குடி நீர்க் குழாய்களை சீரமைப்பதற் காக ரூ.100 கோடி செலவில் பணி கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரூ.2500 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தீட்டப் பட்டு, அதில் முதல் கட்டமாக ரூ.1,550 கோடிக்கான அனுமதி பெறப்பட் டுள்ளது. தேர்தல் முடிந்ததும் இந்தப் பணிகளும் தொடங்கும். இப்பணிகள் நிறைவடையும்போது, புதுக்கோட்டை நகரின் குடிநீர்ப் பிரச் சனை முழுமையாகத் தீர்க்கப்படும். அதேபோல கந்தர்வகோட்டை ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்தி ஒரு நகராட்சிக்கான கட்ட மைப்பு வசதிகள் செய்து கொடுக் கப்படும் என உறுதியளிக்கிறேன். இதற்கு ஒன்றிய அரசின் நிதியைக் கேட்டுத் தரும் எம்.பி.,யாக துரை வைகோ இருப்பார்” என்றார். இடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “திமுக அணிக்கு மாநிலம் முழுவதும் வெற்றி  வாய்ப்பு நன்றாக உள்ளது. அதி முக அணியும், பாஜக அணியும் இரண் டாம் இடத்தைப் பிடிப்பதற்காகத் தான் தங்களுக்குள் கடுமையாகப் போட்டி போட்டுக் கொள்கின்றனர்” என்றார். எம்.சின்னதுரை கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை பேசுகை யில், இந்தத் தொகுதியில் அதி முகவை வெற்றிபெறச் செய்துவிட லாம் என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பகல் கனவு காண் கிறார். கந்தர்வகோட்டை தொகுதி  வாக்காளர்கள் யாரும், யாருக்கும்  விலை போக மாட்டார்கள் என்ப தற்கு இங்கு கூடியிருக்கும் கூட்டமே  சாட்சி. மோடி அரசை வீழ்த்துவ தற்கும், இந்திய இறையாண்மை யைப் பாதுகாப்பதற்கும் உதவி செய்யும் வகையில் திருச்சி தொகுதி யில் துரை.வைகோ 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெறுவார். 6 சட்ட மன்றத் தொகுதிகளிலும் அதிகமான வாக்குகளை தீப்பெட்டி சின்னத் திற்கு பெற்ற தொகுதியாக கந்தர்வ கோட்டை இருக்கும்” என்றார். நிகழ்ச்சிகளுக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலர் கே.கே.செல்லப் பாண்டியன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, நகர்மன்றத் தலைவர் செ.திலகவதி, காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர் பெனட் அந்தோணிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் இளமதி அசோகன் உள்ளிட் டோர் பேசினர்.