அறந்தாங்கி, அக்.21 - இராமநாதபுரம் நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, புதுக் கோட்டை மாவட்டம் அறந் தாங்கி நகர் பகுதிகளில், பெரிய கடைவீதி முக்கம், பழைய மீன் மார்க்கெட், பட்டுக்கோட்டை சாலை, அக்ரஹாரம் சாலை, பேரா வூரனி சாலை, மூலக்கடை ரயில்வே சாலை ஆகிய இடங்களில் புதிதாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனை தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி யில் அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.