பாபநாசம், ஏப்.3 - மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் தளவாய் பாளையத்தில் தொடங்கிய பிரச்சாரம், சாலியமங்கலம், திருக்கருக்காவூர், மெலட்டூர், அய்யம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. கை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து, திருக்கருக்காவூரில் அமைச் சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “நல்ல இந்தியா பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை உங்களிடம் வைத்துள் ளேன். மக்களுக்கான அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்தத் தேர்தல் நமக்கானத் தேர்தல். நம்மை காக்கக் கூடிய தேர்தல்” என்றார். இதில், காங்கிரஸ் வேட்பாளர் சுதா, பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துசெல்வம், அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன் உட்பட பலர் உடனி ருந்தனர்.