districts

அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு எதேச்சதிகாரத்தை காட்டுகிறது

அரியலூர், ஆக.6 -

    அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச் சர் அமித்ஷாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

     அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூர் கிராமத்தில் சனிக்கிழமை  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டி  அளித்தார்.

     அப்போது அவர் கூறுகையில், “காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வருடன் கலந்து  பேசி  முடிவு செய்யப்படும். மேலும், இரண்டு  மாநில மக்களின் நலனுக்கு ஏற்ப காவிரி மேலாண்மை வாரியம் தலையிட்டு உரிய தீர்வை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இதனை சரியான முறையில் அணுகி சுமூகத் தீர்வை ஏற்படுத்தி தரும் என நம்புகிறோம்.

    ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்ற கருத்து அடிப்படையில், பாஜக அரசு ‘ஒரே மொழி ஒரே மதம்’ என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அதனடிப்படையில், இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் இந்தி மொழியை பேச வேண்டும்; எதிர்கா லத்தில் நாட்டில் அனைவரும் இந்தி பேசக் கூடியவர்களாக மாற வேண்டும்; இந்தி பேசும் மக்களின் கலாச்சாரத்தை மாநிலங்கள்  பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

    யார் மீதும் இந்தியை திணிக்கக் கூடாது  என்பதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயக அணுகுமுறைகளை ஒருபோதும் பாஜக அரசு மதிப்பதில்லை. அரசியலமைப்பு சட்டத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு எதேச்சதி காரத்தை காட்டுகிறது. இது கண்டிக்கத் தக்கது” என்றார்.