districts

img

குறைந்தபட்சம் ஊதியம் ரூ.25 ஆயிரம் கேட்டு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ஒன்பதாயிரத்தை குடும்ப ஓய்வூதியமாக அறிவித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாநில, மாவட்டத் தலைவர்கள் பேசினர்.