திருச்சிராப்பள்ளி, செப்.24 - மாவட்டங்களின் தன்மைக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டு மென ஆட்டோத் தொழிலாளர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். மீட்டர் கட்டணத்தை திருத்தி இயக்கும் திருச்சி மீட்டர் ஆட்டோக்கள், ஊர் ஆட்டோ, ஓலா ஆட்டோ, ராபிட்டோ ஆட்டோ நிறுவ னங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்-லைன் அபராத முறையை உடனே ரத்து செய்ய வேண்டும். திருச்சி மாநகரின் தன்மைக்கு ஏற்றார் போல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை பேச்சு வார்த்தையின் மூலம் நிர்ணயம் செய்ய வேண்டும். நலவாரியம் மூலம் புதிய ஆட்டோ செயலியை துவங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர், மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநகர் மாவட்ட நிர்வாகி வெற்றிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்டச் செய லாளர் சிவராஜ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் சந்திரன், மாவட்டத் தலைவர் சுரேஷ், நிர்வாகி வீரமுத்து, ஆட்டோ சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் சம்பத் ஆகியோர் பேசினர். இதில் திருச்சி மாநகர், புறநகர் சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மன்னார்குடி திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெ.செல்வ குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் சிறப்பு ரையாற்றினார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.என்.டி.ரமேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்டத் தலைவர் எம்.கலைச்செல்வன், அந்தோணிசாமி உள்ளிட்டோர் உரை யாற்றினர். கரூர் ஆட்டோ, டாக்சி, டெம்போ மற்றும் வேன் ஓட்டுநர்கள் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் போக்கு வரத்து ஆய்வாளர் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் என்.ரங்கராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். துறைவாரி சங்க தலைவர்கள் பேசினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ஹோச்சுமின் நன்றி கூறினர்.