புதுக்கோட்டை, செப்.14- புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஊராட்சி ஒன்றியம் நார்த்தாமலை ஊராட்சியைச் சேர்ந்த 18 ஏழைக் குடும்பங் களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வியா ழக்கிழமை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆயி ரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் குடி யிருக்க சொந்தமாக வீடும், மனைப்பட்டா வும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கந்தர்வகோட்டை தொகு திக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மனைப் பட்டா கிடைக்க தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை முயற்சி எடுத்து வரு கிறார். இவரது முயற்சியால் பல்வேறு கிரா மங்களில் உள்ள ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வரு கிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் நார்த்தா மலையைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டு மனைப்பட்டாக்களை அரசின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வழங்கினார். நிகழ்வில் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், குன்றாண்டார் கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஆர். என்.போஸ், மாவட்டக் கவுன்சிலர் செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் மா.நா.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.