பாபநாசம், ஜூலை 22 -
மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதலமைச் சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “நீட் தேர்வில் 610 மதிப்பெண் பெற்ற பிற மாநில மாணவர்கள் நாகை, விருது நகர், கள்ளக்குறிச்சி, அரியலூர் போன்ற மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது, தமிழ்நாட்டு மாணவர் கள் மட்டும் சென்னையில் மருத்துவக் கல்வியைப் பயில முயற்சிக்கின்றனர். இதனால் மாநிலத்தின் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கை இடங்களை தமிழக மாணவர்கள் இழக்க நேரிடுகிறது.
மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, சேலம், திருநெல்வேலி, கோவை, திருச்சி, தூத்துக்குடி எனத் தமிழகத்தில் பல நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அதிக படுக்கைகளும், வசதிகளும் கொண்டு சிறப்பாக இயங்குகின்றன. அதுமட்டுமல்ல, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் ஒன்றிய மருத்துவக் கவுன்சில் மூலம் தரக் கட்டுப்பாடு செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்திலுள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.
எனவே முதலமைச்சர், நீட் தேர்வில் அதிகளவில் மதிப்பெண்கள் எடுத்த நம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை தேசிய அளவிலான ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்க வேண்டும். இவர்கள் சென்னை தவிர, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இயங் கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் பயில்வதற்கான விழிப்பு ணர்வு இயக்கத்தைத் நடத்த வேண்டும்.
மேலும் தேசிய அளவிலான ஒதுக் கீட்டில் பயிலும் மருத்துவ மாணவர்க ளின் கல்விக் கட்டணத்தைத் தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும். மாணவர் களுக்கு மருத்துவக் கல்விக்கான கலந் தாய்வு நடந்து வருவதால் இதற்கான முடிவை முதல்வர் ஸ்டாலின் உடனடி யாக அறிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.