பெரம்பலூர், மே 16-
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் (சிஐடியு) பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி செவ் வாயன்று பெரம்பலூர் ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சு.செல்வி, வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜெயமணி, உஷா, வனிதா, லட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின், மாவட்ட நிர்வாகிகள் அ. ரெங்கநாதன், பி.ரெங்கராஜ், எம்.கருணாநிதி, பி.கிருஷ் ணசாமி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றவர்கள், “2023-ஆம ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. உடனடியாக ஊதியம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் தன்னார்வலர் களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ஊக்கத்தொகை வழங்கு வதாக அறிவிக்கப்பட்டது. மூன்று மாதங்கள் மட்டும் வழங்கிவிட்டு நிறுத்தியுள்ள னர். எனவே ஊதியத்துடன் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், இணையவழி மூலம் பணிகளை பதி வேற்றம் செய்ய கைப்பேசி மற்றும் டேட்டா வழங்க வில்லை. எனவே அதைக் கைவிட வேண்டும, மாதம் தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், தினமும் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் பயணப் படி வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.