districts

img

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, செப்.5 - மருத்துவத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்தை வங்கி கணக்கில் வழங்கிட வேண்டும். ஸ்கோரிங் முறையில் ஊதியத்தை பிடித்தம்  செய்வதை கைவிட வேண்டும். முழு  நேர - நிரந்தர ஊழியர்களாக அறிவிக்கப் பட வேண்டும். இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம்  செய்ய வேண்டும். பேறுகால உதவிகளை வழங்க வேண்டும். தீபாவளி, பொங்கல் விழாக் களுக்கான போனசை ஒரு மாத ஊதியமாக வழங்க வேண்டும் எனக் கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாநில தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் உதயசங்கரி தலைமை வைத்தார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஆர்.ராமானுஜம், மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன், மாண வர் சங்க மாவட்ட செயலாளர் அ.அமுல் காஸ்ட்ரோ ஆகியோர் உரையாற்றினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதி காரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

;