districts

img

மாநில அளவிலான கபாடி போட்டி உற்சாகத்துடன் சென்ற மயிலாடுதுறை வீரர்கள்

மயிலாடுதுறை, ஜன.14 - மாநில அளவிலான ஜூனி யர் சாம்பியன் ஷிப் கபாடி  போட்டிக்கு ரயிலில் செல்லும் வீரர்களை, மயி லாடுதுறை ரயில் நிலையத் தில், மயிலாடுதுறை கபாடி கழகத்தினர் உற்சாகப் படுத்தி வழியனுப்பினர். மாநில அளவிலான ஜூனி யர் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி கோயம்புத்தூர் மாவட்டம் கற்பக விநாயகர் பல்கலைக்கழகத்தில் ஜன.14 ,15, 16 ஆகிய தேதி களில் நடைபெற உள்ளது.  இந்த போட்டிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா ஒரு அணிகள் பங்கேற்க உள்ளன.  அதன்பேரில், மயி லாடுதுறை மாவட்ட கபாடி  அணியினர் சனிக்கிழமை மாலை போட்டிக்கு செல்வ தற்காக, மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். அவர்களை மயி லாடுதுறை மாவட்ட அமெச் சூர் கபாடி கழக தலைவர் முனைவர் மா.ரஜினி, அமைப்புச் செயலாளர் ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் உற்சாகப்படுத்தி வழி யனுப்பி வைத்தனர். 12 விளையாட்டு வீரர்களு டன் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தின் பயிற்சி யாளர் காசி கார்த்திகேயன், மேலாளர் குகன் உள்ளிட் டோர் உடன் சென்றனர்.