districts

மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கம்

பாபநாசம், ஜுலை 24 -

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழா நடந்தது.

    திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழ கன் வரவேற்றார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பேசினார். மத்திய மீன்வளம், கால்நடை பரா மரிப்பு, பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முரு கன் மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

     மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் பேசுகையில், “2028 ஆம் ஆண்டு வரவுள்ள மகா மகத்தை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும். கும்ப கோணம் - பட்டுக்கோட்டை, கும்பகோணம் - விருத்தா சலம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். பாபநாசம் ரயில்வே கேட்டில் பாலம் அமைக்க வேண்டும்”  என்றார். இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத்  தலைவர் கலைச்செல்வன், ரயில் பயணிகள் சங்கச் செய லர் சரவணன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, டி.எஸ்.பி பூரணி உட்பட பலர் பங்கேற்றனர்.