districts

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை, ஜூலை 18 -

      மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் இயற்பியல் துறை முன் னாள் மாணவர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  

     அக்கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்று தற்போது சென் னையில், கல்லூரிகளின் கல்வி இயக்குநராக பொறுப்பு வகிக்கிற முனைவர் ஜி. கீதா, அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தராக பொறுப்பு வகிக்கும் முனைவர் ஜி.ரவி, கல்லூரி முதல்வராக உள்ள முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் ஆகியோருக்கு சக முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா வும், ஓய்வு பெற்ற இயற் பியல் துறைத்தலைவர் முனைவர் பி.சி.ஜோப் பிரபாகர், முன்னாள் முதல் வர் முனைவர் ஜீன் ஜார்ஜ், முனைவர் ஜோசப் வேதகிரி ஆகி யோருக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடை பெற்றன.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக இயக்கு நர் முனைவர் ரீட்டா ஜான் மற்றும் பல்வேறு துறை சார்ந்தோர் கலந்து  கொண்டனர். கல்லூரி  இயற்பியல் துறை முன் னாள் பேராசிரியர்கள், இன்னாள் பேராசிரியர் கள், இயற்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.