மயிலாடுதுறை, ஜன.19- தமிழகத்தின் 38-வது மாவட்ட மாக மயிலாடுதுறை மாவட்டம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் அதே ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2020 டிசம்பர் 28 ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியராக லலிதா நிய மனம் செய்யப்பட்டார். தற்போது மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலக கட்டிடத்திலேயே தற்காலிக ஆட்சியர் அலுவலகம் செயல் பட்டு வரும் நிலையில், மயி லாடுதுறை அருகே பால் பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலு வலகம், கட்டுவதற்காக தரும புரம் ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப் பட்டு ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதனன்று 7 மாடி கொண்ட பிரம்மாண்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை காணொலிகாட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மயிலாடுதுறை எம்.எல்.ஏ எஸ்.ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையவுள்ள இடத்தில் பூமி பூஜையும் நடைபெற்றது.